News November 17, 2024

ஈரோட்டில் தலை துண்டாகி ஒருவர் பலி

image

ஈரோடு ரயில் நிலையம் நடைமேடை 1இல் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் அறைக்கு அருகில் தலை துண்டாகி ஒருவர் சடலமாக கிடந்தார். ரயில் நிலையம் மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு வயது 60 இருக்கும். அவர் நீல நிற ஆடை அணிந்திருந்தார். ரயிலில் அடிபட்டு இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News March 3, 2026

ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 2, 2026

ஈரோடு: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

image

ஈரோடு மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in <<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News March 2, 2026

ஈரோடு: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

image

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>> பண்ணுங்க.கடைசி தேதி 27.03.2026 ஆகும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!