News November 17, 2024
மின்தடை: கிண்டி ஹாஸ்பிட்டலில் மா.சு ஆய்வு

கிண்டி கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். நேற்றிரவு திடீரென ஏற்பட்ட மின்தடையால், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சு, மின்தடை விரைந்து சரிசெய்யப்பட்டு வருவதாகவும், நோயாளிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
Similar News
News August 28, 2025
Health Tips: இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News August 28, 2025
BREAKING: அடுத்தடுத்து விஜய் ரசிகர்கள் மரணம்

தவெக மாநாட்டிற்கு முன்பும், பின்பும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். வேலூரை சேர்ந்த மதன், நண்பர்களுடன் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சாப்பிட சென்றுள்ளார். அப்போது மதன் காணாமல் போன நிலையில், கரூர் அரவக்குறிச்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் 22-ம் தேதி விபத்தில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதால் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
News August 28, 2025
2 நாளில் முதல் சாதி மறுப்பு திருமணம்

CPI(M) அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பெ.சண்முகம் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, திருத்துறைப்பூண்டியில் உள்ள CPI(M) அலுவலகத்தில் காதலர்கள் சஞ்சய்குமார் – அமிர்தா ஆகியோருக்கு முதல் சாதி மறுப்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிகழ்வில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.