News November 17, 2024
50 வருட CONG ஆட்சியில் வறுமை ஒழிந்ததா? ராஜ்நாத்

அம்பேத்கருக்கு காங்கிரஸ் மரியாதை கொடுத்ததில்லை என ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் பேசிய அவர், காங்கிரஸ் வறுமையை ஒழிப்பதாக 50 ஆண்டுகளாக பேசி வருகிறார்களே தவிர, அவர்களால் அதை செய்ய முடியவில்லை என்றார். சாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேசி ராகுல் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், காங்கிரஸின் அந்த முயற்சியை மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News August 27, 2025
சண்டை போட்டாலும் சேர்ந்தே பயணித்தாக வேண்டும்: USA

இந்தியா – அமெரிக்கா இடையில் சிக்கலான உறவு நீடிப்பதாக அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெஸண்ட் தெரிவித்துள்ளார். இருப்பினும் இரு நாட்டு தலைவர்களும் நட்புறவை பேணுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவும் சேர்ந்து பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 27, 2025
பிஹாரிகள் தாக்கப்படும் போது ஸ்டாலின் எங்கே போனார்? PK

தமிழ்நாட்டில் பிஹார் மைந்தர்கள் தாக்கப்பட்டபோது CM ஸ்டாலின் எங்கே போனார் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலினை பிஹாருக்கு அழைத்ததன் மூலம் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பிஹாரிகள் குறிவைத்து தாக்கப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டதை நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News August 27, 2025
நாளை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

நாளை (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.