News November 17, 2024
இந்த செல்லப்பிராணிகள் மிகவும் விலை உயர்ந்தவை

விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்ப்பது சிலருக்கு பொழுதுபோக்காக உள்ளது. சிலர் அவற்றை வைத்திருப்பதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகின்றனர். இதன் காரணமாக செல்லப்பிராணிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில், அதிகமான விலைக்கு விற்பனையாகிறது. திபெத்திய மாஸ்டிஃப்: ₹20 லட்சம், சவன்னா பூனை: ₹42 லட்சம், Hyacinth Macaw: ₹40 லட்சம், Palm Cockatoo: ₹17 லட்சம், Koi fish: ₹1.5 லட்சம் வரை விற்பனையாகிறது.
Similar News
News August 28, 2025
கலப்பு திருமணம் பாஜக ஆபிஸில் நடைபெறுமா? சீமான்

காதல் திருமணங்களுக்கு தங்களது கட்சி அலுவலகங்களை பயன்படுத்தலாம் என சிபிஎம் மற்றும் அண்ணாமலை கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சீமான், ஒரு இந்து பையனுக்கும், இஸ்லாமியப் பெண்ணுக்கும் பாஜக அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து வைப்பார்களா? அதைப் போன்று உயர் சாதி பெண்ணுக்கும், பட்டியல் சமூக பையனுக்கும் சிபிஎம் சார்பில் காதல் திருமணம் செய்து வைப்பார்களா? என கேட்டுள்ளார்.
News August 28, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 28, 2025
விரைவில் தயாராகும் ‘கேப்டன் பிரபாகரன் 2’

‘கேப்டன் பிரபாகரன் 2’ படத்தை விரைவில் எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சண்முக பாண்டியன் அவரது தந்தை விஜயகாந்தை போலவே இருப்பதால், நடிப்பதால், அவரை வைத்தே 2-ம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆன ‘கேப்டன் பிரபாகரன்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2k கிட்ஸும் அப்படத்தை வெகுவாக ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.