News November 16, 2024
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ-வுக்கு 2 ஆண்டு சிறை

காட்டுமன்னார்குடி அடுத்த மேல்பருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலரான வீராசாமி (65) கடந்த 2012-ம் ஆண்டு தானே புயலில் பாதிக்கப்பட்ட அதேபகுதியை சேர்ந்த ஆசைதம்பி என்பவருக்கு புயல் நிவாரண தொகை வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வீராசாமிக்கு இன்று கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் சிறப்பு நீதிபதி நாகராஜன், 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News November 12, 2025
கடலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் மாதம்தோறும் நான்கு புதன் கிழமைகளில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (Unique Disabiliy Identity Card) வழங்கும் முகாம்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் வார புதன் மற்றும் அனைத்து வெள்ளிகிழமைளில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
கடலூர்: டிராக்டர் சக்கரம் ஏறி பரிதாப பலி

கடலூர் கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (56). இவர் குடிநீர் எடுத்து செல்லும் டிராக்டர் வண்டியின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல குடிநீர் வண்டியில் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, வேல்முருகன் வண்டியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் வண்டியின் பின் சக்கரம் லோகநாதன் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 12, 2025
கடலூர்: கடைசி தேதி அறிவிப்பு..

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15-ம் தேதியே கடைசி நாளாகும் என வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் பதிவு செய்து பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5% மட்டும் காப்பீடு கட்டணமாக, அதாவது ரூ.564 செலுத்தி பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


