News November 16, 2024
மாமல்லபுரம் கடலில் குளித்த 2 பேர் மாயம்

அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்(20) மற்றும் ரியாஸ்(18), வீட்டில் மெரினா பீச்சுக்கு செல்வதாக கூறிவிட்டு, நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். அங்கு, 5 பேரும் கடலில் குளித்தபோது, கிரிஷ் மற்றும் ரியாஸ் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். இருவரையும் மாமல்லபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் உதவுயுடன் தேடி வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
தெருநாய்கள் அச்சத்தில் சென்னை மக்கள்

சென்னையில் கடந்த சில நாள்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகள் அச்சமடைகிறார்கள். மேலும், இரவு நேரத்தில் பைக்கில் செல்ல நபர்களை தெருநாய்கள் விரட்டி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும்? மக்களே உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
News September 10, 2025
சென்னை: மாணவன் கொலை- திமுக பிரமுகர் பேரனுக்கு ஜாமீன்

திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் நிதின்சாயை கார் ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகியின் பேரன் சந்துருவுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. காதல் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலால் இக்கொலை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மனுதாரர் கல்லூரி மாணவர் என்பதாலும், ஏற்கனவே 41 நாட்கள் சிறையில் இருந்ததாலும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
News September 10, 2025
சென்னை: கனரா வங்கியில் ரூ.22,000 சம்பளத்தில் வேலை

சென்னை, இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <