News November 16, 2024

கூட்டு பாலியல் வழக்கில் சாட்சி விசாரணை

image

பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நகராட்சி கவுன்சிலர் சிகாமணி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு ராமநாதபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு (நவ.13) விசாரணைக்கு வந்தது. இதில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் நவ. 20 ல் சாட்சிகள் விசாரணை துவங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News March 2, 2026

இராமநாதபுரம் இரவு ரோந்து காவல்துறை பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News March 1, 2026

ராம்நாடு: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <>SANCHAR SAATHI<<>> என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன்பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE IT.

News March 1, 2026

ராம்நாடு: பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!