News November 16, 2024
வாக்காளர் முகாமை பார்வையிட்ட ஆட்சியர்

கரூர் வட்டத்தில் கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டையில் பல்வேறு திருத்தங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த முகாமில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News March 8, 2026
கரூர்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 8, 2026
கரூரில் இருந்து விலகுகிறார் செந்தில் பாலாஜி?

கோவை மண்டல திமுக பொறுப்பாளராகச் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்றது. இதனால் வரும் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமெனப் பல நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் கோவை அல்லது கரூர் என எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?
News March 8, 2026
கரூரில் மனைவி, மகள் கழுத்தறுத்துக் கொலை! JUDGMENT

கரூரில் கடந்த 2024-ம் ஆண்டு, குடும்பத் தகராறில் மனைவி கல்பனா மற்றும் 5 வயது மகள் சாரதிபாலாவைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி செல்வகணேஷிற்கு(46), கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. ஆத்திரத்தில் கொடூரச் செயலைச் செய்த செல்வகணேஷை, நீதிபதி தங்கவேல் குற்றவாளி என உறுதி செய்து இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


