News November 16, 2024
சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் கடன், கைவினை கலைஞருக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
புதுக்கோட்டை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?..APPLY

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 4, 2026
புதுக்கோட்டை: பாஜக போஸ்டரால் பரபரப்பு

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சியினர் பல்வேறு வகைகள் நூதன பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, திமுக அரசை விமர்சித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டரில் பொதுமக்களுக்கு விலையில்லா குடிநீர் கொடுங்க, மாநகர பாஜக தலைவர் சீனிவாசன் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 4, 2026
புதுக்கோட்டையில் துணிகரம்: கோயிலில் உண்டியல் திருட்டு

ஆலங்குடி அடுத்த கல்லாலங்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது 3 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. இந்நிலையில் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


