News November 16, 2024
பாரதம் வேறு.. இந்தியா வேறு.. ஆளுநரின் புது விளக்கம்

பாரதம் என்பது இந்தியா அல்ல; பாரதம் என்பது தார்மீக நாடு, இது மதத்தால் உருவாகவில்லை என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். பாரத் என்பது இந்தியாவைவிட வேறுபட்டது; ஐரோப்பியர்களே இந்தியா என அழைத்தனர். இந்தியாவின் எல்லா மொழி இலக்கியங்களும் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன எனக் கூறிய அவர், செப்பு மொழி பதினெட்டு உடையாள் என நாட்டின் ஒற்றுமையை பாரதி எடுத்துரைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 28, 2025
இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க

கோவை, நெல்லை, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனிடையே, தற்போது கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இரவு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பாதுகாப்புடன் செல்லுங்கள். உங்கள் ஊரில் மழையா?
News August 28, 2025
RSS பிடியில் அதிமுக இருப்பது உறுதியானது: திருமாவளவன்

அதிமுகவை RSS வழிநடத்தினால் என்ன தவறு என எல்.முருகன் கூறியது, அதிமுக முழுக்க RSS கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதை காட்டுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரியார் வழியில் வந்த அதிமுக தற்போது வீர சாவர்க்கர் வழிவந்தவர்களால் வழிநடத்தப்படலாம் என்று சொல்வது கவலை அளிப்பதாகவும், இது தவறா, தவறில்லையா என்பதை EPS தான் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 28, 2025
இந்திய விண்வெளி துறையில் அடுத்த மைல்கல்

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் அடிக்கல் நாட்டினார். இங்கு 90 கோடி ரூபாய் மதிப்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பு, உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கவுள்ளன. இதில் பேசிய நாராயணன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து 500 கிலோ எடை கொண்ட ராக்கெட் ஏவப்படும் என்றார். இந்தியாவின் 4வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் அமையவுள்ளது.