News November 16, 2024
இன்று தேசிய பத்திரிகை தினம்

இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் யார் தவறு செய்தாலும் அவர்களை தட்டிக்கேட்கும் உரிமை பத்திரிகைத்துறைக்கு உண்டு. Fourth Pillar of Democracy என அழைக்கப்படும் பத்திரிகைத்துறையின் சேவைகளை கௌரவிக்கவும், இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகைகளின் இருப்பைக் குறிக்கவும் ‘தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’ தொடங்கப்பட்ட நவ.16ம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது.
Similar News
News March 14, 2026
Adobe நிறுவன CEO சாந்தனு நாராயண் விலகல்

உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான Adobe-ன் CEO பொறுப்பில் இருந்து சாந்தனு நாராயண் விலகியுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர், 18 ஆண்டுகளாக அந்த பொறுப்பில் திறம்பட செயலாற்றினார். பதவி விலகுவதாக அறிவித்த உடனே Adobe-ன் பங்குகள் 7% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன. இவரது தலைமையின் கீழ் Photoshop, Premiere Pro, Illustrator, InDesign போன்றவை உலகத் தரமான படைப்புகளாக மாறின.
News March 14, 2026
பெட்ரோல், டீசல்.. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு

தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் தேவைக்கு அதிகமாக எரிபொருளை நிரப்புவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த தட்டுப்பாடும் இல்லை எனவும் இன்னும் 90 நாள்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
News March 13, 2026
படங்களில் இது இல்லைனா இனி சென்சார் கிடையாது!

மார்ச் 15-ம் தேதி முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில் மற்றும் காட்சிகளை விவரிக்கும் ஒலி வடிவம் கட்டாயம் என சென்சார் போர்டு அறிவித்துள்ளது. காது கேளாதோர், பார்வையற்றோர் உள்ளிட்ட அனைவரும் படங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அம்சங்களுடன் சமர்ப்பிக்கப்படும் படங்களுக்கே இனி சென்சார் சர்டிபிகேட் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


