News November 16, 2024
இன்று தேசிய பத்திரிகை தினம்

இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் யார் தவறு செய்தாலும் அவர்களை தட்டிக்கேட்கும் உரிமை பத்திரிகைத்துறைக்கு உண்டு. Fourth Pillar of Democracy என அழைக்கப்படும் பத்திரிகைத்துறையின் சேவைகளை கௌரவிக்கவும், இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகைகளின் இருப்பைக் குறிக்கவும் ‘தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’ தொடங்கப்பட்ட நவ.16ம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது.
Similar News
News August 27, 2025
தமிழ்நாடு முழுவதும் கட்டுப்பாடு அமல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்து வழிபாடு செய்ய காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தடையில்லா சான்று பெற்று விநாயகர் சிலையை நிறுவ வேண்டும். பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை நிறுவ கூடாது. சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள், கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
News August 27, 2025
BREAKING: ஓய்வு பெற்றார் அஸ்வின்

IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் அஸ்வின் சற்றுமுன் அறிவித்துள்ளார். 2009-ல் CSK அணிக்காக களமிறங்கிய அவர், RR, DC உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி, 187 (IPL) விக்கெட்டுகள், 833 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றிருந்தார். கடந்த IPL சீசனில் CSK-வில் இடம்பெற்ற அவர், சரியாக விலையாடவில்லை என சர்ச்சை எழுந்தது.
News August 27, 2025
SPORTS ROUNDUP: துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம்!

◆ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் கம்ரா தங்கம் வென்றார்.
◆உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் மற்றும் பிவி சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
◆அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ்.