News March 21, 2024

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி; அமைச்சர் ஆலோசனை

image

கடலூர் கிழக்கு மாவட்டம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட தொகுதி திமுக பார்வையாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 3, 2025

கடலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!

News November 3, 2025

கடலூர்: சாராய ஊறல் அமைப்பு-2 பேர் கைது

image

சிறுதொண்டமாதேவி முந்திரி காட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக காடாம்புலியூர் போலீசாருக்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த மேகநாதன் (37), பாஸ்கர் (37) என்ற 2 பேரை கைது செய்து, மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

News November 3, 2025

கடலூர்: துணிக்கடையில் தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

image

கடந்த 17.10.2025 அன்று கடலூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் தீபாவளி துணி எடுக்க வந்த பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் ரூ.10,500-ஐ துணிக்கடையில் தவறவிட்டுள்ளார். இதையடுத்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், புதுநகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு பணத்தை கண்டுபிடித்து நேற்று அனிதாவிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!