News November 16, 2024

பல்லடத்தில் 6 வயது சிறுவன் கொலை

image

பல்லடம் காரணம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கடந்த 3 ஆண்டுகளாக தனது 6 வயது மகனுடன் தங்கி பணிபுரிந்து வரும் ஒடிசாவை சேர்ந்த அனிதா நாயக், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒடிசாவை சேர்ந்த கணுதாஸ் சரியாக வேலை செய்யவில்லை என உரிமையாளரிடம் புகாரளித்தார். இதில் ஆத்திரமடைந்த கணுதாஸ் அப்பெண்ணை பழி வாங்குவதற்காக அவரது 6 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்தார். போலீசார் அவரை கைதுசெய்தனர்.

Similar News

News March 3, 2026

கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.

News March 3, 2026

திருப்பூர்: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS.!

image

திருப்பூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0421-2971141 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News March 3, 2026

திருப்பூர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!