News November 16, 2024
முறைகேடு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை

புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது சென்டாக் மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கலெக்டர் குலோத்துங்கனிடம் அளித்த மனுவில் சென்டாக் மருத்துவ படிப்பில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டு 2ம் கட்ட கலந்தாய்வில் 37 மாணவர்களில், பலர் போலி சான்றிதழ் சமர்பித்துள்ளனர் சான்றிதழ்களை ஆய்வு செய்து முறைகேடு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்
Similar News
News September 13, 2025
புதுச்சேரி: உரிமம் பெறாத விடுதிகளுக்கு சீல்

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உரிமம் பெற்று புதுப்பிக்கப்படாமல் உள்ள தங்கும் விடுதிகள், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் தங்களுடைய உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரிமத்தை புதுப்பிக்காத தங்கும் விடுதி, வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
ஃபாஸ்ட் ஃபுட் உணவை தவிர்க்க வேண்டும்-ஆளுநர்

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழா கம்பன் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,
“தவறான உணவு பழக்க வழக்கம் அதிகமான சர்க்கரை, உப்பு, எண்ணெய்களால் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் புட் உணவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் இது தவிர்க்கப்பட வேண்டும்.” என்று அறிவுறுத்தினார்.
News September 13, 2025
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் புதுச்சேரி தலைமைத் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் அரியாங்குப்பம் மற்றும் மனவேலி தொகுதி சட்டமன்றத் தொகுதியின் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் சார்பில் கலந்து கொண்டு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனை வழங்கப்பட்டது .