News November 16, 2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் – எம்எல்ஏ நந்தகுமார் வேண்டுகோள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் இன்று (நவம்பர் 16) நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் இறுதி பட்டியலில் இடம்பெற செய்ய திமுகவினர் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
விருதம்பட்டு காவல் நிலையத்தில் 4 போலீசார் இடமாற்றம்

வேலூர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், தலைமை காவலர் சுரேந்தர், முதல்நிலை காவலர் முகேஷ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அவர்களை திடீரென இடமாற்றம் செய்து நேற்று எஸ்பி சிவராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் பரத் தர்மபுரிக்கும், கோபிநாத், சுரேந்தர், முகேஷ் ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 5, 2026
வேலூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

வேலூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே<
News March 5, 2026
வேலூர்: ஆட்சியர் இன்று கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்!

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு பகுதியில் இன்று(மார்ச் 5) காலை 10 மணி அளவில் செல்ஃபி பாயின்டை கலெக்டர் சுப்புலட்சுமி திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து 10:30 மணியளவில் காட்பாடி செங்குட்டை பகுதியில் ரிங் ரோடு அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


