News November 16, 2024
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் அரக்கோணம் மற்றும் கலவை பகுதிகளில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் 526 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 326 வருவாய் கிராமங்களில் 9,53,550 சர்வே எண்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை 4,27,969 சர்வே எண்கள் பயிர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வரும் 22ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
5.58லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நிதி உதவி,பேட்டரி சக்கர நாற்காலி,கம்மேடு சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.5.58 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (மார்ச்.2) வழங்கினார். மாற்றத்திறனாளி அலுவலர் செந்தில்குமாரி உடன் இருந்தார்.
News March 2, 2026
வாலாஜா வட்டாட்சியர் பொறுப்பேற்பு வாழ்த்து

வாலாஜா வட்டாட்சியராக நடராஜன் இன்று மார்ச் 2ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ,வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த வட்டாட்சியர் ஆனந்தன் ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.
News March 2, 2026
மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் தேர்வு எழுதினார். பிளஸ் டூ தேர்வு இன்று மார்ச் 2ம் தேதி தொடங்கியது. மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் பதில் சொல்ல சொல்ல இன்னொருவர் தேர்வை எழுதினார் . அதனை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா உடன் இருந்தார்.


