News November 16, 2024
இந்துத்துவா அரசியலில் ஆளுநர் மாளிகை: சு.வெ

மதம், சாதி சார்ந்த வெறுப்பு அரசியலுக்கு திருவள்ளுவரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என மதுரை MP சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்துத்துவா அரசியலை பிரசாரப்படுத்தும் வேலையில் ஆளுநர் மாளிகை பிரதான இடமாக உள்ளதாக சாடிய அவர், அவர்கள் சார்ந்த அரசியலுக்கு திருவள்ளுவரை பயன்படுத்த துடிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது.
Similar News
News March 17, 2026
BREAKING: வருத்தம் தெரிவித்தார் CV சண்முகம்

விழுப்புரம் நிகழ்ச்சியில் <<19406314>>நடிகை நயன்தாரா<<>> குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு CV சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு மகளிர் ஆணையம் உள்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, வருத்தம் தெரிவித்த CV சண்முகம், நயன்தாராவின் பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். உள்நோக்கத்தோடு பேசவில்லை; வாய் தவறி பேசி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 17, 2026
CVS மீது ECI நடவடிக்கை எடுக்கணும்: பாலபாரதி

<<19406314>>நடிகை நயன்தாரா<<>> குறித்து C.V.சண்முகம் சர்ச்சையாக பேசியது அரசியல் ரீதியாக விவாதப்பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு பெண்களிடம் சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று Ex MLA பாலபாரதி, வலியுறுத்தியுள்ளார். மேலும், பெண்கள் குறித்து சி.வி.சண்முகம் இவ்வாறு பேசுவது, இது முதல்முறை அல்ல என்றும் அவர் தேர்தலில் போட்டியிடாத வகையில் ECI நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 17, 2026
அதிக நேரம் ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் யார் தெரியுமா?

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம், மறைவை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் நோன்பு நேரம் மாறுபடுகிறது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாட்டு மக்கள் ஒருநாளில் 16 மணி 30 நிமிடங்கள் நோன்பு இருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் 13 மணி 45 நிமிடங்கள் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.


