News November 16, 2024
காஞ்சிபுரம் கபடி வீரர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட கபடி கழகம் சார்பில், வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாளை (நவ.17) கொளப்பாக்கம் அரசு பள்ளியில் நடைபெறும் இத்தேர்வில், கலந்து கொள்ளும் வீரர்கள் 20 வயதுக்கு உட்பட்டும் 70 கிலோவிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில கபடி போட்டியில் கலந்து கொள்வார்கள். வீரர்களின் கபடி குழுக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
Similar News
News August 23, 2025
காஞ்சிபுரம்: மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செப்டம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
காஞ்சிபுரம் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News August 22, 2025
காஞ்சிபுரத்தில் வீட்டு வரி கட்ட அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <