News November 15, 2024
கத்தியை காட்டி பணம் பறித்த 3 கொள்ளையர்கள் கைது

வெள்ளமடம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் ஐடி நிறுவன ஊழியரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூபாய் 2 லட்சத்தை 3 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரில், திருநெல்வேலியை சேர்ந்த லட்சுமணன்(30), மேலபட்டாளம் பகுதியை சேர்ந்த கொட்டியப்பன்(35), திருநெல்வேலி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த அஸ்வின்(20) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
ஆதிதிராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்

தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகு கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர தகுதியான நபர்கள் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று குமரி ஆட்சியர் அழகுமீனா கூறியுள்ளார்.
News March 3, 2026
குமரி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

குமரி மாவட்ட மக்களே, <
News March 3, 2026
குமரி: விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் இம்மானுவேல் (50). இவர் டிரைவர் ஆவார். இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக சிறுநீரக பிரச்சனை இருந்து வந்தது. இதனால், மனவேதனையில் இருந்த அவர் பார்வதிபுரம் பகுதியில் களைக்கொல்லி விஷம் மருந்தை குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக, இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.


