News November 15, 2024

 பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 79 மையங்கள் அமைப்பு

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வானது 2025 மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே மாணவர் விவரங்கள் பிளஸ் 1 பொதுத் தேர்வு அடிப்படையில் தயார் செய்யப்பட்டன. இதில், மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள், இறந்து போனவர்கள் விவரங்களை நீக்கும் பணிகள் முடிந்து மாணவர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வுக்கு 79 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன.

Similar News

News March 3, 2026

வேலூரில் சர்க்கரை நோய்க்கு இலவச சிகிச்சை!

image

வேலூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உடனடி இலவச சிகிச்சை அளிக்கப்படும். SHARE பண்ணுங்க!

News March 3, 2026

வேலூரில் 207 போலீசாருக்கு ப்ரோமோஷன்!

image

காவல்துறையில் பணியாற்றக்கூடிய போலீசாருக்கு பதவிக்காலம் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2013-ல் பணியில் சேர்ந்த 169 பேர் முதல் நிலை காவலரில் இருந்து தலைமைக் காவலராகவும், 2016-ல் சேர்ந்த 38 பேர் 2-ம் நிலை காவலரில் இருந்து முதல் நிலை காவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 207 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 3, 2026

அணைக்கட்டில் பாமக முக்கிய ஆலோசனை!

image

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு (மேற்கு) ஒன்றியம் நேமந்தபுரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று (மார்ச்.2) வாக்குச்சாவடி திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை குறித்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!