News November 15, 2024
மதுரை முல்லை நகர் விவகாரம் – சீமான் அறிக்கை

மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசு அறிக்கை அனுப்பியிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News March 2, 2026
மதுரை இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
மதுரை: பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்த மோடி

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தற்கொலை செய்துகொண்ட பக்தர் பூர்ண சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர், குடும்பச் சூழல் குறித்துக் கேட்டறிந்தார்.
News March 1, 2026
FLASH மதுரை: தனி விமானம் மூலம் டெல்லி புறபட்ட மோடி..!

மதுரையில் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியான பின் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் கூட்டணி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.


