News November 15, 2024
சாலையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்போம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இன்றைய பதிவில் ‘சாலையைக் கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்’ என்ற வாசகம் அடங்கிய பதிவை பகிர்ந்துள்ளனர். செல்போன் பயன்படுத்தப்படும் போது கவனச்சிதறல் காரணமாக விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்.
Similar News
News March 7, 2026
ஒட்டன்சத்திரம்: தட்டித்தூக்கிய அமைச்சர்!

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த பல்வேறு மாற்றுக்கட்சியினர் தங்களது கட்சிகளிலிருந்து விலகி, திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில், அவர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களை அமைச்சர் சக்கரபாணி சால்வை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.
News March 7, 2026
கொடைக்கானல்: அடையாளம் தெரியாத எலும்புக்கூடு

கொடைக்கானல் கங்கா காம்பவுண்ட் பகுதியில் ஏரிச்சாலையில் இருந்து நீர் வெளியேறும் இடத்தில் பேண்ட் அணிந்த நிலையில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. தகவலறிந்து வந்த கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் அவற்றை கைப்பற்றி ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 7, 2026
நத்தம் அருகே சோகம்; பெண் பலி

நத்தம் அருகே கவரயபட்டியை சேர்ந்தவர் அடைக்கம்மாள் (55). இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அடைக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


