News November 15, 2024
கிண்டி மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு

சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பித்தப்பை கல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்துள்ளார். மருத்துவர்கள் இல்லாததே விக்னேஷ் உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News April 7, 2026
ஜாஃபர் சாதிக் வீட்டில் 2வது நாளாக சோதனை

பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் வீட்டில்
வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று அவரது சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அவரது வீட்டில் சோதனை நீடிக்கிறது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 7, 2026
BREAKING: ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்தி வைப்பு!

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ELECTION OBSERVER வரும்வரை இவரின் வேட்பு மனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியுள்ளார். அதேபோல் திமுக சார்பில் எழும்பூரில் போட்டியிடும் தமிழன் பிரசன்னாவின் மனுவை ஏற்பதிலும் குழப்பம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News April 7, 2026
BREAKING: விஜய்யின் வேட்பு மனு ஏற்பு!

சென்னை பெரம்பூரில் போட்டியிட விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், அவரின் வேட்பு மனுவை ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மனு 2 முறை திருத்தம் செய்யப்பட்டது. மேலும், சென்னையில் இந்த தொகுதியில் மட்டும் கே.விஜய், எஸ்.விஜய், ஜோசப் என அதிகபட்சமாக 66 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதே போல் கொளத்தூரில் முதலமைச்சரின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.


