News November 15, 2024
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

சென்னையில் ஒரே நாளில் மூதாட்டி, இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். நீலாங்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட ராஜி(60) என்ற முதியவர் வன்கொடுமைக்கு பின் கொல்லப்பட்டுள்ளார். ராமாபுரத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளம்பெண்ணை ஹெச்.ஆர்., ஒருவர் வன்கொடுமை செய்துள்ளார். குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றாலும், தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா எனக் கேள்வி எழுகிறது.
Similar News
News March 4, 2026
ராசி பலன்கள் (04.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 4, 2026
ஈரான் பேச்சுவார்த்தைக்கு ரெடி… NO சொல்லும் டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் 4-வது நாளாக தொடர்கிறது. ஈரானும் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனிடையே ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
News March 4, 2026
சாதிய விஷம் விதைப்பவர்களை கைது செய்க: மாரி செல்வராஜ்

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியுள்ள<<19286535>> கொலைவெறி தாக்குதல்<<>> பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய பெருமிதங்களை விஷமாக விதைத்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சிறைபடுத்தவும், வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற TN-க்கான நம்பிக்கையை உருவாக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


