News March 20, 2024
ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது

பீகாரில் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மே.வங்க மாநிலம் சிலிகுரிக்கு ராணுவத் தளவாடங்களுடன் வீரர்களும் சென்று கொண்டிருந்தனர். அப்போது இன்ஜினுடன் இணைத்திருந்த பெட்டிகளில் சில தனியாக துண்டிக்கப்பட்டதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே விபத்து சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
நல்ல ரோடு போட்டால், நிறைய விபத்து நடக்கும்: BJP MP

சாலைகள் நன்றாக போடப்பட்டிருந்தால், வாகனங்கள் வேகமாக செல்லும். அதன் காரணமாகவே விபத்துக்கள் அதிகரிக்கும் என BJP MP கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் நிகழ்ந்த பஸ் விபத்து குறித்து பேசிய அவர், நெடுஞ்சாலைகள் பெரிய வளைவுகளின்றி, ஒரே நேர்கோட்டில் இருக்கும் வகையில் அமைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். இவரின் கருத்தை குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
News November 5, 2025
போலி வாக்காளர்கள் CONG-க்கு வாக்களிக்க மாட்டார்களா? ECI

<<18205152>>ஹரியானா வாக்கு திருட்டு<<>> குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ECI அதிகாரிகள் மறுத்துள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கும் SIR நடவடிக்கையை ராகுல் ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை விளக்க வேண்டும். உண்மையில் போலி வாக்காளர்கள் இருந்தால், அவர்கள் பாஜகவிற்கு தான் வாக்களித்தார்கள் என்பதை ராகுல் எப்படி கூறுகிறார், ஏன் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்க மாட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
News November 5, 2025
FLASH: இலவச பட்டா.. தமிழக அரசு புதிதாக அறிவித்தது

சென்னையில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அயனாவரம், கிண்டி, அமைந்தகரை, கொளத்தூர், மாம்பலம், பெரம்பூர், வேளச்சேரி தாலுகாக்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க ராதாகிருஷ்ணன், மணவாளன் ஆகிய தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனராம்.


