News March 20, 2024

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது

image

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு – நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 20 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். ஏற்கெனவே, 21 ராமேஸ்வர மீனவர்களை கைது செய்ததோடு, மேலும் 20 பேரை கைது செய்துள்ளனர்.

Similar News

News December 13, 2025

அரசியலில் குதித்த ராமதாஸின் அடுத்த வாரிசு

image

பாமகவில் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு இடையே ஸ்ரீகாந்தியின் மற்றொரு மகனான சுகுந்தனையும் ராமதாஸ் களமிறக்கியுள்ளார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார். முன்னதாக, முகுந்தனுக்கு பாமகவில் பொறுப்பு வழங்கியதே ராமதாஸ் – அன்புமணி இடையே சண்டை வளர முக்கிய காரணமாக அமைந்தது.

News December 13, 2025

தமிழ் நடிகை தற்கொலைக்கு இதுதான் காரணம்

image

தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்ட சீரியல் நடிகை <<18544425>>ராஜேஸ்வரி<<>>, வீட்டின் குத்தகை தொகை ₹13 லட்சத்தை பயன்படுத்த நினைத்திருக்கிறார். இதற்கு கணவர் சதீஷ் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ராஜேஸ்வரி, அளவுக்கு அதிகமான BP மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2025

மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது முடியும்?

image

சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் பணிகள் பெயரளவிலேயே இருப்பதாக <<18474670>>CM ஸ்டாலின்<<>> விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஹாஸ்பிடலுக்கு இதுவரை ₹421.02 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பதிலளித்த அவர், நவ.30, 2025 படி, 42% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2026, அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!