News November 15, 2024
அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் கபூர். இவர் நேற்று மதியம் நண்பர்களோடு கடலில் இறங்கி குளித்தனர். அப்பொழுது திடீரென எழுந்து வந்த ராட்சத அலை ஒன்று அவர்களை வாரி சுருட்டியது. இதில் நண்பர்கள் தப்பித்து கரை திரும்பிய நிலையில் அப்துல் கபூரை காணவில்லை. தகவலறிந்த போலீசார் மீனவர்களுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்துல் கபூர் பாறை இடுக்கிலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
Similar News
News March 5, 2026
புதுச்சேரி: பணி நியமன ஆணை வழங்கும் விழா

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கலைரங்கத்தில், இன்று புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினர்.
News March 5, 2026
BREAKING காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டம் முழுவதும் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை பள்ளிகளில் திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
புதுச்சேரி: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

புதுச்சேரி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <


