News November 15, 2024

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை 1 மாதம் நிறுத்தம்

image

நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை, அடுத்த ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக INDSRI FERRY SERVICES PVT LTD வெளியிட்டுள்ள அறிவிப்பில், வானிலை காரணமாக நவ.19 – டிச.18 வரை, பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாகை – காங்கேசன்துறை இடையே நவ.15-18ஆம் தேதி வரை, கப்பல் சேவை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

இன்று நிதிஷ்குமார், நாளை EPS.. தேஜஸ்வி எச்சரிக்கை

image

கூட்டணிக் கட்சிகளை ஹைஜாக் செய்து அழிப்பதே, பாஜகவின் வழக்கம் என்று RJD தலைவர் தேஜஸ்வி விமர்சித்துள்ளார். நிதிஷ்குமாரின் கட்சியை BJP அபகரித்துவிடும் என தேர்தலுக்கு முன்பே சொன்னேன்; இன்று நடந்துவிட்டது. OBC ஒருவரை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக வைத்துக்கொண்டு, RSS ஆட்கள்தான் பிஹாரை ஆள்வர். மகாராஷ்டிராவில் சிவசேனா, பிஹாரில் ஜனதா தளத்துக்கு நேர்ந்ததுதான் அதிமுகவுக்கும் (EPS) நடக்கும் என எச்சரித்துள்ளார்.

News March 5, 2026

விடுமுறை.. நாளை முதல் 3 நாள்களுக்கு அரசு அறிவிப்பு

image

சனிப்பெயர்ச்சி (மார்ச் 6), வார விடுமுறை நாள்களையொட்டி நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல வேண்டுமா? உங்களுக்காகவே அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் இப்போதே டிக்கெட் புக் பண்ணுங்க!

News March 5, 2026

T20 WC: இந்திய அணி பேட்டிங்!

image

பெரும் பரபரப்புக்கிடையே வான்கடேவில் நடக்கும் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. இரண்டு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!