News November 14, 2024
காலிஸ்தான் தீவிரவாதியை தூக்க இந்தியா முயற்சி

கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் தீவிரவாதி அர்ஷ்தீப் சிங்கை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கடந்த அக்.28ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது 50 கிரிமினல் வழக்குகள் இந்தியாவில் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ல் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், 2023-ல் அவரை தீவிரவாதியாக இந்திய அரசு அறிவித்தது.
Similar News
News August 26, 2025
அமித்ஷா அடிக்கடி கூறியதால் சந்தேகம் வந்தது: ராகுல்

பாஜக 40- 50 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என அமித்ஷா அடிக்கடி கூறியது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு குறித்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், முதலில் அது குஜராத்தில் தொடங்கி 2014-ல் தேசிய அளவில் பரவியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வாக்கு திருட்டு தற்போது மற்ற மாநிலங்களிலும் பரவ தொடங்கிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News August 26, 2025
Beauty Tips: ₹3000 கிரீம் வேணாம்.. ₹10 படிகாரம் போதும்

அழகுக்காக தாத்தா காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்தான் படிகாரம். இதில் உள்ள ஆண்டி-ஏஜெண்ட்கள் முகப்பரு, Open Pores, எண்ணெய் வடிதல் பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யுமாம் ▶முதலில் படிகாரத்தை பொடியாக அரைத்து, ரோஸ் வாட்டர் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள் ▶இதனை முதலில் உங்கள் கையில் தடவி அலர்ஜி ஆகிறதா என சோதித்துப்பாருங்கள் ▶பிறகு முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். SHARE.
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகளையொட்டி மதுரை, தோவாளை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் பூக்கள் விலை விண்ணைத் தொட்டுள்ளன. மதுரை சந்தையில் கடந்த சில நாள்களாக ₹600-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை இன்று ₹2,000 வரை விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ பிச்சிப்பூ ₹1,200, முல்லை ₹1,000, செண்டுமல்லி ₹130, வாடாமல்லி ₹250-க்கு விற்பனையாகிறது. உங்கள் ஊரில் பூக்கள் விலை என்ன?