News March 20, 2024
ஏர்வாடி அருகே 5 லட்சம் பணம் பறிமுதல்

கீழக்கரையை சேர்ந்த ஷியாம் பிரகாஷ் என்பவர் ஏர்வாடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட தனது நகையை திருப்புவதற்காக இன்று ரூ.5லட்சத்தை எடுத்துக் கொண்டு ஏர்வாடிக்கு காரில் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News September 7, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்து செல்லும் காவல்துறை விவரம்

ராமநாதபுரம், இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை அறிவித்துள்ளது.
News September 6, 2025
ராமேஸ்வரம் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் – திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் – மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் – திருச்சி சோழன் (22675), எழும்பூர் – ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் – ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.
News September 6, 2025
ராம்நாடு: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

ராமநாதபுரம் மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் அடைய வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <