News November 14, 2024

சிதம்பரம் கோவில் விவகாரம் உயர்நீதிமன்றம் உத்தரவு

image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும். சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் அமைக்கப்படும். பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளது. தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது. இந்து அறநிலையத் துறையின் வாதத்தை மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

கடலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 7, 2026

சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ வழக்கு

image

விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன்(28). இவர் 16 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு சிதம்பரம்அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி நல்லூர் ஊர்நல அலுவலர் மணிமேகலைவிருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அருள்முருகன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News March 7, 2026

வாட்ஸ்அப் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

image

பண்ருட்டி பகுதியில் வாட்ஸ்அப்பில் குழுக்கள் உருவாக்கி அதன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது செல்போனில் வாட்ஸ்அப் மூலம் லாட்டரி சீட்டு விற்ற
திருவதிகையை சேர்ந்த திருநாவுக்கரசு சிவா(59), பண்ருட்டி பனங் காட்டு தெரு பன்னீர்செல்வம்(56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!