News November 14, 2024
குன்றத்தூரில் எலி மருந்தின் நெடி பரவி மகன், மகள் உயிரிழப்பு

குன்றத்தூரைச் சேர்ந்த கிரிதரன்(34), வீட்டில் எலி தொல்லை இருந்ததால், எலி மருந்து பயன்படுத்தியுள்ளார். வீட்டில், எலி மருந்தின் நெடி பரவி, கிரிதரனின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரிதரனின் மகன், மகள் உயிரிழந்தனர். கிரிதரன் மற்றும் அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 8, 2026
காஞ்சிபுரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 8, 2026
காஞ்சிபுரம்: மகளிருக்கு இந்த எண் அவசியம்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம்(65). இவர், கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று(மார்ச் 7) காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


