News November 14, 2024

இலவச தையல் இயந்திரம்: திருவாரூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரரின் மனைவி/கைம்பெண் மற்றும் திருமணம் ஆகாத மகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதற்கு தகுதியாக குறைந்தது 3 மாதம் தையல் பயிற்சி பெற்றவராகவும், இதற்கு முன்னதாக மத்திய/மாநில அரசுகளிடமிருந்து இலவச தையல் இயந்திரம் பெறாதவராக இருத்தல் அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு தொலைபேசி எண்: 04366-290080.

Similar News

News September 15, 2025

திருவாரூர்: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

image

கொரடாச்சேரி போலீஸ் சரகம் மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாசம் (53). இவரது மகன் பூவரசன் (22) திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான மலையூருக்கு வந்த பூவரசன் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை தந்தை கைலாசம் கண்டித்து வேலைக்குப் போகுமாறு கூறியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பூவரசன், வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News September 15, 2025

திருவாரூர்: சமுதாய வள பயிற்றுநர் நியமன அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தினை அமைத்திட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும், செயல்பாட்டில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சமுதாய வள பயிற்றுநராக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு, தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நாளைக்குள் (செப்.16) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News September 15, 2025

திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!