News November 14, 2024
ஈரோடு அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

சத்தி பேருந்து நிலையத்திற்கு இன்று காலை தாளவாடியில் இருந்து ஈரோடு செல்வதற்காக அரசு பேருந்து ஒன்று வந்தது. அப்போது பூ மார்க்கெட்டில் பூ வாங்கிக்கொண்டு பஸ் ஏறுவதற்காக நடந்து சென்ற புளியம்பட்டியை சேர்ந்த சாவித்திரி என்பவர் மீது பஸ்சின் முன் சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்தவர். இந்நிலையில் சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 16, 2025
புளியம்பட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

புஞ்சைப் புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி, சுப்பிரமணியர் கோவிலில், கால பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலபைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
News August 16, 2025
ஈரோடு: 500 அரசு உதவியாளர் வேலை: நாளையே கடைசி

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.22405 முதல் ரூ.62265 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நாளை ஆக.17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 16, 2025
ஈரோட்டில் இன்றுடன் நிறைவு பெறுகிறது

உலகப் புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர் திருவிழா 13ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இன்று குதிரைச் சந்தை மற்றும் திருவிழா நிறைவு பெறுகிறது. குதிரைச்சந்தை, காங்கேயம் காளைகள், ஓங்கோல் இன பசு மாடுகள், கொங்கு காளைகள் போன்ற சந்தையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வாங்கி சென்றனர். குதிரைகள் பத்தாயிரம் முதல் 1 1/4 கோடி வரை விற்பனையானது. புகழ்பெற்ற குதிரை சந்தை இன்றுடன் நிறைவு பெறுகிறது.