News November 14, 2024
சாலை பாதிப்பு குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்

தற்போது வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சாலைகளில் மழைநீர் தேக்கம், சாலை பாதிப்பு உள்ளிட்ட பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சாலை பாதிப்புகள் குறித்து புகார் அளிக்க 93817 38585, 99520 75411 என்ற வாட்ஸ் அப் எண்களை நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
Similar News
News September 11, 2025
அடையாளமே மாறும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பூங்கா ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை சென்ட்ரலில் உள்ள இந்த பூங்கா ரயில் நிலையம் ரூ.10.68 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
News September 10, 2025
கொடி கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் வரும் 14-ஆம் தேதிக்குள் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொடிக்கம்பங்களை கட்சிகள் அகற்ற தவறினால் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுவார்கள். அகற்றுவதற்கான செலவுத்தொகை கட்சிகளிடம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News September 10, 2025
வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்டை நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.