News November 14, 2024

போலி ஆவணம் – கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

image

புதுச்சேரி அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்டாக் எம்பிபிஎஸ், சேர்க்கை என்ஆர்ஐ ஒதுக்கீடு இடங்களுக்கு போலி ஆவணம் சமர்ப்பித்த 49 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். என்ஆர்ஐ, ஒதுக்கீடு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Similar News

News September 13, 2025

புதுவை: 500 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்!

image

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழா கம்பன் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “அங்கன்வாடிகளில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு தேவையான முட்டை, கொண்டைக்கடலை, சத்துமாவு வழங்கப்படுகிறது. புதிதாக 500 அங்கன்வாடி ஊழியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 13, 2025

ஏழை மாணவனுக்கு உதவி கரம் நீட்டிய ஆட்சியர்

image

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவன் ராஜகுரு இவருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும், தனது வறுமையால் படிக்க முடியாமல் தவித்து வந்தார். இவருடைய நிலைமையை அறிந்த மாவட்ட ஆட்சியர் குலோதுங்கன் இன்று மாணவனின் வீட்டுக்கு சென்று மாணவனுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி உதவி கரம் நீட்டி நெகழ்ச்சியை ஏற்படுத்தினார்.

News September 13, 2025

காரைக்கால்: சாலையை ஆய்வு செய்த ஆட்சியர்

image

கோட்டுச்சேரி கொம்பன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வரிச்சிக்குடி காமராஜர் சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை, மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் அவர்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா இன்று (13.9.2025) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!