News November 14, 2024
2100ல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு?

உலகின் மக்கள் தொகை தற்போது 800 கோடியை கடந்து விட்டது. இந்த எண்ணிக்கை 2100-க்குள் 1000 கோடியை கடந்து விடும் என்கிறது UN Population Division. 2100ல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக ஏற்ற இறக்கம் கண்டு இந்தியா 153.3 கோடி மக்கள் தொகையுடன் நீடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சீனா (77.1 கோடி), நைஜீரியா (54.6 கோடி), பாகிஸ்தான் (48.7 கோடி) இருக்கும் என்றும் கணித்துள்ளது.
Similar News
News August 13, 2025
சினிமாவில் 50 ஆண்டு நிறைவு! ரஜினிகாந்துக்கு EPS வாழ்த்து

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு EPS வாழ்த்து தெரிவித்துள்ளார். பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ படம் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் ரஜினிக்கு வாழ்த்து கூறியிருந்தார். ரஜினிக்கு திரைத்துறை பாராட்டு விழா நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
News August 13, 2025
டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார் காலமானார்!

1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் & டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார்(67) உடல்நலக் குறைவால் காலமானார். 1983-ல் வெளியான ‘சலங்கை ஒலி’ படத்தில் தொடங்கி ‘சபாஷ் நாயுடு’ வரை தொடர்ச்சியாக கமலுடன் குமார் பணிபுரிந்துள்ளார். தேவர் மகன், விருமாண்டி, தளபதி, படையப்பா, கில்லி, வல்லவன் என பல Iconic பட போஸ்டர்கள் இவரின் கைவண்ணம்தான். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 13, 2025
தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி

பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் வழங்க அன்புமணி முடிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், அன்புமணியின் பாமக தலைவர் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த பொதுக்குழு செல்லாது என்று ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பொதுக்குழுவால் தலைவராக தேர்வானதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்தை (EC) அன்புமணி நாடவிருக்கிறார்.