News March 20, 2024
சித்திரை திருவிழா : மதுரை ஆட்சியருக்கு நோட்டீஸ்

மதுரை சித்திரை திருவிழாவின் போது, சாமி சிலை மீது பம்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிக பிரஷர் கொண்ட பம்புகள் மூலம் ரசாயனப் பொடிகள் கலந்து தண்ணீர் பீய்ச்சுவதால் சிலை மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
Similar News
News October 24, 2025
தங்கம் விலை ₹2 லட்சமாக உயரும்

சர்வதேச அளவில் தங்கம் ஒரு அவுன்ஸ் $4100-க்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சிறிதளவு வீழ்ச்சி கண்டிருந்தாலும், இனி உயரவே வாய்ப்புள்ளது. 2028-ல் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $8000 வரை உயரும் என JP Morgan நிறுவனம் கணித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் ₹2 லட்சம் வரை உயரும் என்று கூறப்படுகிறது.
News October 24, 2025
சாவின் விளிம்புக்கு சென்றேன்: திலக் வர்மா

2022-ல் சாவின் விளிம்புக்கு சென்றதாக திலக் வர்மா கூறியுள்ளார். ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர உடற்பயிற்சி செய்ததால், ‘Rhabdomyolysis’ என்னும் தசை சிதைவு நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச A அணியுடனான போட்டியின் போது, கை விரல்கள் இயங்காமல் போக, ஹாஸ்பிடலுக்கு விரைந்துள்ளார். அப்போது, சற்றே தாமதித்திருந்தாலும் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என டாக்டர் தெரிவித்ததாக அவர் கூறினார்.
News October 24, 2025
”திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவு..”

தன்னை அவமரியாதையாக நடத்தினாலோ, கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை தர மறுத்தாலோ திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுப்பேன் என தவாக வேல்முருகன் கூறியுள்ளார். 2021 தேர்தல் முடிந்ததில் இருந்தே திமுகவுக்கும், வேல்முருகனுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், இவர் வைக்கும் கோரிக்கைகளை திமுக ஏற்குமா, கூட்டணியில் தவாக நீடிக்குமா என மீண்டும் சலசலப்பு கிளம்பியுள்ளது.


