News March 20, 2024
மத்திய அமைச்சர் ஷோபா மீது போலீசார் வழக்குப் பதிவு

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதற்கிடையே, அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்ககோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தேதி குறிச்சாச்சா?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. புதிதாக ₹1,000 பெற தகுதியானவர்களின் முதல்கட்ட பட்டியல் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த திட்டம் தொடங்கிய செப்.15-ம் தேதியை கணக்கில் கொண்டு புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட இருக்கிறதாம். தற்போது 1.2 கோடி பேர் ₹1,000 பெற்று வருகின்றனர்.
News September 8, 2025
ஏடிஎம் PIN நம்பராக இதனை வைக்க வேண்டாம்!

ஏடிஎம் PIN நம்பரை யூகிக்க முடியாத வகையில் வைப்பது அவசியம். 1234, 4321, 1111, 2222 போன்றவற்றை ஹேக்கர்களால் ஈசியாக கண்டறிய முடியும். உங்கள் பிறந்த தேதி, செல்போன் எண்ணின் கடைசி 4 நம்பர், வண்டி நம்பர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம். இதனை நினைவில் வைப்பது எளிது என்றாலும், இதுபோன்ற எண்களை ஈசியாக திருடலாம். உங்களுக்கு தொடர்பில்லாத சீரற்ற நம்பரை (e.g. 4681, 9573) பயன்படுத்துவது நல்லது. SHARE IT.
News September 8, 2025
நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?

நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்ததாக காட்டுத் தீ போல் செய்தி பரவியது. அவரது உடல்நிலை குறித்து ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் கவலை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த செய்தி வெறும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. பாதுகாப்பாகவும், ஆரோக்கியமுடனும் இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சிலமணி நேரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் விளம்பர பதிவை காஜல் பகிர்ந்துள்ளார்.