News March 20, 2024

கடலோர காவல்படை மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவை கடலோர காவல்படை போலீசார் இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையில் இன்று கடலுக்கு சென்று மீன் பிடித்த மீனவர்களிடம் உரிமம் உள்ளதா?, மது, பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினர். மேலும், கடலில் புது நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். படகுகளில் மதுபானம், பரிசு, பணம் கடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். 

Similar News

News September 10, 2025

புதுச்சேரி: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

image

புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கத் தலைவர் ரகு என்கின்ற ரகுநாதன் தலைமையில் ஆட்சியர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளிக்க நேற்று வந்திருந்தனர். நீண்ட நேரம் ஆகியதால் ஆட்சியில் இயக்கத்தை புறக்கணிப்பதாக கூறி இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News September 10, 2025

புதுச்சேரி: நாளை குடிநீர் நிறுத்தம்

image

புதுவை அரியாங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் நாளை (செப்.11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரியாங்குப்பம் மேற்கு மற்றும் அதனை சார்ந்த பகுதி களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News September 10, 2025

புதுச்சேரியில் தெரு நாய்களை பிடிப்பது குறித்து ஆலோசனை

image

புதுச்சேரியில் தெரு நாய்களை பிடிப்பது குறித்து உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அனுமதியில்லாமல், வளர்க்கப்படும் நாய்களை வளர்ப்போர் மீது அபராதம் நடவடிக்கை எடுப்பது, நகர மற்றும் கிராம பகுதியில் தெரு நாய்களை பெருக்கத்தை தடுக்க நகராட்சி மற்றும் கால்நடைதுறை மூலம் குழுக்கள் அமைத்து கருத்தடை செய்வது பற்றி ஆலோனை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!