News March 20, 2024

வாணியம்பாடி அருகே பெண் சடலம் மீட்பு

image

வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் 20.03.2024 இன்று காலை 9 மணியளவில் விவசாய கிணற்றில் பெண் சடலம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். விசாரணையில் வாணியம்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்த மது பிரியா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

மூவர்ணக் கொடி அலங்காரத்தில் ஆட்சியர் அலுவலகம்

image

இந்திய நாடு முழுவதும் நாளை (15.08.2025) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து தளங்களும் மின்விளக்கு அலங்கரிக்கப்பட்டு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஜொலித்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

News August 14, 2025

திருப்பத்தூரில் பலத்த பாதுகாப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட்15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியேற்றுகிறார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் மாவட்ட எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 511 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செளமியா தெரிவித்தார்.

News August 14, 2025

திருப்பத்தூர்: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள நுழைவு வாயில் மற்றும் ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளின் உடைமைகள், பயணிகளின் ரயில்களில் தீவிர சோதனை செய்தனர்.

error: Content is protected !!