News March 20, 2024

செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் பரபரப்பு புகார்

image

கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படிக்கும் 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் உள்பட பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்களின் பாலியல் வன்முறையை மறைக்க முயற்சித்து, குழந்தையின் பெற்றோர்களை மிரட்டிய பள்ளியின் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இன்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மனு வழங்கினர்.

Similar News

News October 30, 2025

செங்கை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நாளை (அக்.31) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

செங்கல்பட்டில் கிராம சபை கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.01 உள்ளாட்சிகள் தினத்தன்று காலை11.00 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்தவும் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக விளம்பரப் பலகைகள் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-இன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

செங்கை: TVK போஸ்டரால் பரபரப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தமிழக வெற்றி கழகம் தொண்டர்களால் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுள்ளது. அதில் “மீண்டும் அப்பா SAC அவர்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய பேட்டியில் ‘நான் தவெகவில்தான் இருக்கிறேன்’ என்று SAC கூறிய நிலையில், இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.

error: Content is protected !!