News November 13, 2024

ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உட்பட 6 பேர் விடுதலை

image

தேனி, கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் Ex.CM OPS தம்பி ஓ.ராஜா உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று(நவ.13) நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இவ்வழக்கு தொடர்புடைய ஓ.ராஜா உட்பட 6 பேரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதில், ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Similar News

News July 9, 2025

தேனி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News July 9, 2025

கம்பம்: தாய் திட்டியதால் இளைஞர் தற்கொலை

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (26). இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அஜித் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் நேற்று (ஜூலை.8) வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News July 8, 2025

இதெல்லாம் நம்பாதீங்க – தேனி மாவட்ட காவல்துறை

image

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு செல்போனில் வரும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வரும் போலி குறுஞ்செய்தி, லிங்குகள், தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் எனவும் இதனால் வங்கி கணக்குகளிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கபடும் எனவும் தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது போன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!