News March 20, 2024

கடலூர் அருகே ரூ.5000 பறிமுதல் 

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் இன்று(மார்ச்.20) சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முகமது கௌஸ் என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கணக்கில் வராத பணம் ரூ.5 லட்சம் இருந்ததால் இதனை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் அபிநயா முன்னிலையில் தனி வட்டாச்சியர் பலராமனிடம் வழங்கப்பட்டது.

Similar News

News January 22, 2026

கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

கடலூர்: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

News January 22, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ வழக்கு

image

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை 22 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தனிமையில் இருந்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமானது குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பண்ருட்டி போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!