News March 20, 2024
விருதுநகர் அருகே போக்குவரத்து நெரிசல்

சிவகாசி மாநகராட்சிகள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். பாய்ஸ் ஸ்கூல் அருகே காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிக அளவில் வருவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்படுகிறது. இந்தப்பகுதியில் முறையாக போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததே இதுபோன்ற போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Similar News
News August 10, 2025
விருதுநகரில் இனி குண்டாஸ் பாயும் என எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளம் கிராமத்தில் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
பட்டாசு விபத்து எதிரோலியால் போலீசார் அதிரடி நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கல் மற்றும் மூலப்பொருட்களை எடுத்து செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக மாவட்டம் முழுவதும் சட்டவிரோத பட்டாசு குறித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News August 10, 2025
விருதுநகர் பெண்களே.. இலவச தையல் மிஷின் வேணுமா?

விருதுநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை 04562-252397 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.