News March 20, 2024
நீலகிரி: புலி தாக்கி மீண்டும் பசு மாடு பலி

ஓவேலியில் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பகுதியை சேர்ந்தவர் புஷ்ராஜ். இவர் வழக்கம் போல் தனது பசு மாடுகளை நேற்று ( மார்ச் 19) மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். அதில் ஒரு மாடு திரும்பி வரவில்லை. இதையடுத்து தேடி சென்ற போது புலியிடம் சிக்கி பலியானது தெரிந்தது. ஏற்கனவே பந்தலூரில் பசுமாட்டை புலி வேட்டையாடி கொன்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 27, 2025
பார்சலில் உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கி ஹோட்டலுக்கு பத்து ரூபாய்க்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம் பரிதி கூறுகையில் “குன்னூர் அம்மா உணவகத்தில் பார்சலில் உணவு வாங்குவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீதும், பார்சல் வழங்கும் ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம் , உதகை ஊரகம் உட்கோட்டம் , குன்னூர் உட்கோட்டம் , கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் பகுதிகளில் இன்று காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள், மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0423 2444111 மற்றும் அவசர உதவிக்கு 100 அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

நீலகிரியில் நகராட்சி (ம) பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நாளை(அக்.27) முதல் துவங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கோரிக்கை வைக்கலாம். (SHARE)


