News November 12, 2024
புதிய பாம்பன் ரயில் பாலத்தில் 2 நாட்கள் ஆய்வு

புதிய பாம்பன் பாலத்தில் நவ.13, 14 ஆகிய 2 நாட்கள் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. நவ.13ஆம் தேதி மண்டபம் – பாம்பன் இடையே ரயில்வே வழித்தடத்திலும் நவ.14ம் தேதி புதிய பாம்பன் பாலத்திலும் ஆய்வு செய்கிறார். மேலும் நவ.14ம் தேதி புதிய பாம்பன் ரயில் பாலத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும்
Similar News
News August 10, 2025
பாம்பன் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த எம்எல்ஏ

பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை கள் சிறை பிடிக்கப்பட்ட இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரை இன்று (ஆகஸ்ட் 10) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சந்தித்தார். அப்போது, முதல்வரிடம் கொண்டு சென்று, விடுதலை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
News August 10, 2025
ராமநாதபுரத்தில் சுய வேலைவாய்ப்புக்கு பயிற்சி

இந்த சுய வேலைவாய்ப்பு பயிற்சியானது தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மூலம் வழங்கப்படுகிறது. 7 நாட்கள் பயிற்சி வகுப்பு. கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை சார்ந்த சுற்றுலா மேம்படுத்தப்பட்டு வரும் சூழலில், இந்த பயிற்சி உதவியாக அமையும். இதன்மூலம், படகு ஓட்டுநர் உரிமத்திற்கு தகுதி பெறலாம். மேலும் விவரங்களுக்கு <
News August 10, 2025
நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்

தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் 13 ஆம் தேதி அன்று தங்கச்சி மடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் 19ஆம் தேதி அன்று ரயில் மறியல் நடைபெறும் என்றும் அறிவிப்பு செய்துள்ளனர்.