News November 12, 2024
கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? ராமதாஸ்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக ராமதாஸ் குறை கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போது, மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் மட்டுமே எழுதுவதாக விமர்சித்துள்ள அவர், கடிதம் எழுதுவதோடு மாநில அரசின் கடமை முடிந்துவிட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலம் எப்போது வரும் எனவும் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்.
Similar News
News August 25, 2025
EPS தான் முதல்வர் வேட்பாளர்: நயினார் நாகேந்திரன்

ADMK, BJP மீண்டும் கூட்டணி அமைத்தது முதலே ‘கூட்டணி ஆட்சி’ என்ற குரல் பாஜகவில் ஒலித்து வருகிறது. ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று EPS பேசியதால் குழப்பம் அதிகரித்தது. இந்நிலையில், NDA கூட்டணியின் தமிழக தலைவர் EPS தான், அவரே CM வேட்பாளர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலுக்கு பிறகு EPS எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 25, 2025
வங்கி லோன்.. வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு

வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முதல் முறை கடன் பெறும் பலர் இந்த சிக்கலால் தவித்த நிலையில் அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஆனாலும் கடன் பெறுவோரின் நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
உடலை வலுவாக்க உதவும் தனுராசனம்!

✦செரிமானத்தை அதிகரித்து, உடலை வலுவாக்க உதவுகிறது.
➥முகம் தரையை பார்க்கும்படி கை, கால்களை நீட்டியபடி படுத்துக் கொள்ளவும்.
➥மெதுவாக கால்களை பின்புறத்தில், மேல்நோக்கி உயர்த்தவும். அதே நேரத்தில், தலை & கைகளையும் உயர்த்தி, பின்னோக்கி நீட்டி, கால்களை பிடிக்கவும்.
➥உடலை வில் போல் வளைத்து பிடித்து, 15- 20 விநாடிகள் வரை இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.