News March 20, 2024
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?

மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற ED அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது, செந்தில் பாலாஜியின் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பலமுறை ஜாமின் கோரி மனு செய்த போதும் அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. அங்கித் திவாரிக்கு கொடுக்கப்பட்ட ஜாமினை முன்வைத்து, செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோர வாய்ப்புள்ளது.
Similar News
News November 2, 2025
அய்யோ சாமி! BREAKING NEWS ஆக்காதீங்க! செல்லூர் ராஜு

செங்கோட்டையன் நீக்கம் குறித்து செல்லூர் ராஜு விளக்கமளித்தார். அப்போது, எனக்கும்தான் மன வருத்தம் இருக்கும், அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது; அதை EPS-யிடம் தான் கூற வேண்டும் என்றார். உடனே, உங்களுக்கு என்ன மனவருத்தம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். சுதாரித்துக் கொண்ட அவர், எனக்கு மனவருத்தம் இல்லை; EPS என்னை நன்றாக வைத்துள்ளார். இதை ஒரு BREAKING NEWS-ஆக போட்டு விடாதீங்க என கேட்டுக்கொண்டார்.
News November 2, 2025
3-வது T20: இந்தியா பவுலிங்.. அணியில் 3 மாற்றங்கள்!

ஓவல் மைதானத்தில் நடக்கும் 3-வது T20-யில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஞ்சு, ராணா, குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர். பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ், துபே, அக்சர், சுந்தர், அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, பும்ரா.
News November 2, 2025
SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு!

தேர்தல் ஆணையம் SIR-ஐ திரும்ப பெறவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், SIR-ஐ ஏற்க முடியாது எனவும், இது வாக்குரிமைக்கு எதிரானது, சட்டவிரோதமானது எனவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.


