News March 20, 2024

மேலூர்: சோகத்தில் மூழ்கிய குடும்பம்

image

மேலூர் அருகே சின்ன கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரதேவன். குடும்ப சூழல் காரணமாக கடந்த 8மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் அர்மேனியா நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 2 வாரத்திற்கு முன் வீரதேவன் பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது கணவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர ஆட்சியருக்கு அவரது மனைவி லட்சுமி  கோரிக்கை விடுத்துள்ளார். 

Similar News

News September 9, 2025

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரி காலமானார்

image

தமிழகத்தின் முன்னணி நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜய்காந்தின் சகோதரி மருத்துவரான விஜயலெட்சுமி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது. நாளை மதுரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தை விஜயகாந்த் குடும்பத்தினர் பூர்விகமாகக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

News September 9, 2025

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி

image

மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆகஸ்ட் 26 முதல் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், செப்.12ம் அன்று நிறைவு பெற உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான குழுப் போட்டிகள் நேற்று தொடங்கின. அறிவுசார் குறைபாடு உடையோர், காதுகேளாதோர், பார்வையற்றோர், கை, கால்கள் பாதிக்கப்பட்டோர் என 5 பிரிவுகளில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

News September 9, 2025

கடன் ஆப்ஸ் மோசடி – மதுரை மாநகர காவல்துறை

image

மதுரை மாநகர காவல்துறை சார்பில் 26 கடன் செயலி மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் பெயரில் ஆப்களை பதிவிறக்கம் செய்து, தொடர்புகள் மற்றும் புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டு மாற்றி நண்பர்கள், உறவினர்களிடம் அனுப்பி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே RBI அங்கீகரித்த ஆப்களிலேயே கடன் பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!